
முகப்பரு போக வீட்டுக் குறிப்புகள்
முகப்பரு முகத்தின் அழகை கெடுப்பதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும்.
முகப்பரு முகத்தின் அழகை கெடுப்பதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும்.
அதிலும் வலியின் போது முகப்பருவை அடிக்கடி தொடுவதால், அப்போது முகப்பரு
வெடித்து பரவ ஆரம்பிக்கிறது.
ஆகவே அத்தகைய முகப்பருவை போக்குவதற்கும், அதனால் ஏற்படும் வலியை
ஆகவே அத்தகைய முகப்பருவை போக்குவதற்கும், அதனால் ஏற்படும் வலியை
கட்டுப்படுத்துவதற்கும் பல இயற்கை பொருட்கள் வீட்டின் சமையலறையிலேயே
உள்ளது. அத்தகைய பொருட்களைக் கொண்டு பராமரித்தால், நிச்சயம் முகப்பரு
பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அவை என்னவென்று பார்க்கலாம்....
• எலுமிச்சையின் சாற்றினைக் கொண்டு முகப்பரு உள்ள சருமத்தில் தேய்த்து, 1
• எலுமிச்சையின் சாற்றினைக் கொண்டு முகப்பரு உள்ள சருமத்தில் தேய்த்து, 1
மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். குறிப்பாக இந்த
முறையை தினமும் மேற்கொண்டால், முகப்பருவால் ஏற்படும் வலியை
குணப்படுத்துவதோடு, முகப்பருவையும் போக்கலாம்.
• வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை முகப்பரு மீது தடவினால் நல்ல
• வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை முகப்பரு மீது தடவினால் நல்ல
நிவாரணம் கிடைக்கும். இல்லையெனில் வெந்தயக் கீரையை தண்ணீர் ஊற்றி பேஸ்ட்
போல் அரைத்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான
நீரில் கழுவலாம்.
• அக்காலத்தில் எல்லாம் பெண்கள் குளிக்கும் போது நீரில் சிறிது வேப்பிலையை
• அக்காலத்தில் எல்லாம் பெண்கள் குளிக்கும் போது நீரில் சிறிது வேப்பிலையை
போட்டு குளிப்பார்கள். அதனால் தான் அவர்களுக்கு சரும பிரச்சனைகள் எதுவும்
வராமல் இருந்தது. ஆகவே அத்தகைய வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து,
தினமும் முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், நிச்சயம் முகப்பரு விரைவில்
குணமாகும்.
• கற்றாழையும் பல சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. தினமும் இரண்டு முறை
• கற்றாழையும் பல சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. தினமும் இரண்டு முறை
கற்றாழையின் ஜெல்லைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால்
அதில் உள்ள மருத்துவ குணத்தால், நாளடைவில் முகப்பரு நீங்கிவிடும்.
• வெள்ளரிக்காயை அரைத்து, அதில் சிறிது தயிர் ஊற்றி கெட்டியான பேஸ்ட் செய்து,
• வெள்ளரிக்காயை அரைத்து, அதில் சிறிது தயிர் ஊற்றி கெட்டியான பேஸ்ட் செய்து,
முகம் மற்றும் முகப்பரு உள்ள இடங்களில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து
கழுவினால், நல்ல பலன் கிடைக்கும்.
• ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் அசிட்டிக் தன்மை அதிகம் இருப்பதால்,
• ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் அசிட்டிக் தன்மை அதிகம் இருப்பதால்,
இதனைக் கொண்டு சருமத்தை பராமரித்தால், பல சரும பிரச்சனைகளைப்
போக்கலாம். அதிலும் ஆரஞ்சு பழத்தின் தோலை காய வைத்து அரைத்து பொடி
செய்து, தண்ணீர் ஊற்றி கலந்து, அந்த பேஸ்ட்டை முகப்பரு உள்ள இடத்தில்
தடவினால், வலி நீங்குவதோடு, முகப்பருவும் மறையும்.
ஒவொருவரும் மருத்துவரின் ஆலோசனை பெற்று முயற்சி செய்யவும்.
இந்த தகவல் வலைதளத்தில் இருந்து பெற்றது. பதிவிட்டவருக்கு நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக