
தோல் வியாதியை போக்கும் புன்னை
புன்னை ஒரு மரவகையைச் சேர்ந்தது. புன்னை தாது அழுகல் போக்கியாகவும், உடல் இசைவு
புன்னை ஒரு மரவகையைச் சேர்ந்தது. புன்னை தாது அழுகல் போக்கியாகவும், உடல் இசைவு
நீக்கியாகவும், நாடி நடையை உயர்த்தி உடல் வெப்பு தரும் மருந்தாகவும் பயன்படும். இது சளி,
ஒற்றைத் தலைவலி, தலைசுற்றல் கண் எரிச்சல், வாத நோய், தோல் வியாதி, வயிற்றுப் புண், வெட்டை,
மேகப்புண், சொறி சிரங்கு குஷ்டம் ஆகியவைகளைக் குணப்படுத்தும்.
பூவை அரைத்துச் சிரங்கிற்குப் போடலாம். இலையை ஊரவைத நீரில் குளித்து வர மேகரணம், சொறி,
பூவை அரைத்துச் சிரங்கிற்குப் போடலாம். இலையை ஊரவைத நீரில் குளித்து வர மேகரணம், சொறி,
சிரங்கு யாவும் மறையும். பூவை நிழலில் உலர்த்தித் தூள் செய்து ஒரு சிட்டிகை காலை, மாலை
கொடுத்து வர டைபாய்டு தீரும்.புன்னை எண்ணெய் பூசி வர மகாவாத ரோகம் முன் இசைவு, பின்
இசைவு, கிருமி ரணம் சொறி சிரங்கு, குட்டரோகப் புண்கள் தீரும்.
புன்னை மரம் கோயில்களில் உள்ளதை ஆயில்யம் நட்சரத்தில் பிறந்தவர்கள் அந்த மரத்தைச் சுற்றி
புன்னை மரம் கோயில்களில் உள்ளதை ஆயில்யம் நட்சரத்தில் பிறந்தவர்கள் அந்த மரத்தைச் சுற்றி
வந்து கட்டிப் பிடித்துத் தழுவும் போது அந்த மரத்தின் கதிர் வீச்சுக்கள் உடலில் படும் போது நோய்கள்
குணமடைகிறது. முக்கியமாக பெண்களுக்கான இதய நோய்கள், மார்பக நோய்கள் குணமடைவதாகச்
சொல்கிறார்கள்.
புன்னை விதையை அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போட முடக்கு வாத ம், கீல்வாயு,
புன்னை விதையை அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போட முடக்கு வாத ம், கீல்வாயு,
வாதவலிகள் தீரும். பட்டைக் குடிநீரால் புண்களைக் கழுவலாம். புன்னையின் இலைகள் பூக்கள் மற்றும்
பட்டையை அரைத்துப் பவுடராக்கி தினம் ஒரு வேளை கொடுக்க மூட்டுவலி, சொறி, சிரங்கு குஷ்டம்
மேகம் ஆகியவை குணமாகும்.
ஒவொருவரும் மருத்துவரின் ஆலோசனை பெற்று முயற்சி செய்யவும்.
இந்த தகவல் வலைதளத்தில் இருந்து பெற்றது. பதிவிட்டவருக்கு நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக