கோழை கட்டுதல்
மிதமிஞ்சிய சளியாலும் சளி கெட்டிப் படுவதாலும் ஏற்படும் நோய் இதுவாகும். இது
கோழை கட்டுதல் என்றும் கூறப்படும். வெள்ளைப் பூண்டை அரைத்து ஒரு துணியில்
கட்டி அதனை விளக்கில் காட்டிச் சுடவைத்து அத்துணியைப் பிழிந்து இஞ்சிச்
சாற்றோடு கலந்து குடித்தால் கபம் நீங்கும். மேலும் வெள்ளைப் பூண்டைச் சுட்டு
அல்லது வேகவைத்துக் கடைந்து தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை
குடித்தாலும் குப்பைமேனிக் கீரையை அரைத்துச் சாறு குடித்து வந்தாலும் இந்நோய்
குணமாகிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக