வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

தூதுவளை


தூதுவளை




( துதூவேளை, அளர்க்கம், சிங்கவல்லி)
Solanum trilobatum
( n.o. Solanaceae)

தூதுவளை ஒர் வகைக்ஷகொடியாகும்.
தூதுவேளையின் மறுக் பெயர் " கூதளம்" என்பதாகும்.
இதன் வேரும் இலையும் கைப்பு சுவையுடையதாகும்...
தூதுவேளையை சமைத்து சாப்பிட கபத்தால் உண்டாகும் காது மந்தம், காதெழுச்சி, காசம், நமைச்சல், அக்னி மாந்தம், தேக உட்குத்தல், விந்து நட்டம் ஆகியவை நீங்கும்.
இலையைச் சிறிய வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட சேர்த்து நல்லெண்ணையில் வதக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு பிண்பு மூன்று நாட்கள் விட்டு மூன்று நாட்கள் சாப்பிட வெண்டும் இவ்வாறு 21 நாட்கள் சாப்பிட சுவாசகாசம் நீங்கும்.
இலையை அரைத்து அத்தடண் சண அளவு பசு வெண்ணைய், பின்பு 10 கிராம் பொடித்த அரிசி திப்பிலி, ஓமம், கடுக்காய்த்தோல் சேர்த்து கலக்கி சூடு செய்து பிழிந்து கிடைக்கும் நெய்யை தேக்கரண்டியளவு தொடர்ந்து 40 நாட்கள் உள்ளுக்குச் சாப்பிட க்ஷயரோகம் குணமாகும்.
துதூவேளை பூவை நெய்யில் வதக்கி தயிருடன் சாப்பிட விந்து கட்டும், அறிவு விருத்தியாகும், இலையை துவையல் செய்து சாப்பிட மாந்தம்; தாது நஷ்டம்,இளைப்பு இவைகள் போகும்.பருப்புடன் சேர்த்து கழம்பு வைத்து சாப்பிட மகோதரம், கர்ண சூலை இவை குணமாகும்.
துதூவேளை காயின் வற்றலைக் குழம்பு செய்து சாப்பிட பித்த வாதம், வாயு மலபந்தம் இவைகளை கண்டிக்கும். துதூவீளையின் பழம் மார்சளி, மார்புவலி, பாம்பு விஷம் இவைகளை போக்கும். துதூவேளை தண்டு இலை முதலானவற்றில் இருந்து சில முக்கிய நுன் சத்துக்களை பிரித்து புற்று நோய்க்கு மருந்துகள் செய்ய ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.


ஒவொருவரும்  மருத்துவரின் ஆலோசனை பெற்று முயற்சி செய்யவும்.

இந்த தகவல் வலைதளத்தில் இருந்து பெற்றது. பதிவிட்டவருக்கு நன்றிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக